பகுதி - 297
அன்பர்கள் உன்னைக் குறித்துச் செய்கின்ற தானம், தவம் ஆகியவற்றின் மேன்மையான பகுதியை
பதச் சேதம் | சொற் பொருள் |
ஈனம் மிகுத்துள பிறவி அணுகாதே Advertisement
| ஈனம்: இழிவு; |
யானும் உனக்கு அடிமை என வகையாக
|
|
ஞான அருள் தனை அருளி வினை தீர
|
|
நாணம் அகற்றிய கருணை புரிவாயே
|
|
தான தவத்தினின் மிகுதி பெறுவோனே
| மிகுதி: மேன்மையான பகுதி; |
சாரதி உத்தமி துணைவ முருகோனே
| சாரதி: சரஸ்வதி (அல்லது) சா-ரதி: அந்த ரதி தேவி; துணைவ: சகோதரா; |
ஆன திருப்பதிகம் அருள் இளையோனே
| திருப்பதிகம்: தேவாரத் திருப்பதிகங்கள்; இளையோனே: ஞானசம்பந்தராக வந்தவனே; |
ஆறு திரு பதியில் வளர் பெருமாளே.
|
|
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/272416477&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p><p align="justify"><strong>ஈனமிகுத்துள பிறவி யணுகாதே</strong> ... இழிவு நிறைந்ததான பிறவிப் பிணி என்னை இனிமேல் அணுகாதபடி;</p><p align="justify"><strong>யானுமுனக்கு அடிமையென வகையாக</strong> ... நானும் உன்னுடைய அடிமையாகின்ற படிக்கு (பேற்றைப் பெற);</p><p align="justify"><strong>ஞானஅருள் தனையருளி</strong> ... மெய்ஞ்ஞானமாகிய உனதருளை அடியேனுக்கு அருள்வித்து;</p><p align="justify"><strong>வினைதீர</strong> ... என்னுடைய வினைகள் தீர்ந்து ஒழியவும்; <strong /></p><p align="justify"><strong>நாணம் அகற்றிய கருணை புரிவாயே</strong> ... நாணம் என்னும் தளையிலிருந்து அடியேனை விடுவிக்கக் கருணை புரிந்தருள வேண்டும்.</p><p align="justify"><strong>தானதவத்தினின்மிகுதி பெறுவோனே</strong> ... (அன்பர்கள் உன்னைக் குறித்தே செய்கின்ற) தானங்கள், தவங்கள் ஆகியவற்றின் மேன்மையான பகுதியைப் பெறுகின்றவனே!</p><p align="justify"><strong>சாரதியுத்தமி துணைவ முருகோனே</strong> ... உத்தமியான சரஸ்வதியம்மையின் சகோதரனே!</p><p align="justify"><strong>ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே</strong> ... (சிவபிரானுக்கு உகப்பு) ஆன பல தேவாரத் திருப்பதிகங்களைத் திருஞான சம்பந்தராகத் தோன்றி, பாடியருளிய இளையவனே!</p><p align="justify"><strong>ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே.</strong> ... ஆறுபடை வீடுகளிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!</p><p align="justify"><em>சுருக்க உரை</em></p><p align="justify"><em>அன்பர்கள் உன்னைக் குறித்துச் செய்கின்ற தானம், தவம் ஆகியவற்றின் மேன்மையான பகுதியை அடைபவனே! சரஸ்வதி (அல்லது ரதி) தேவியின் சகோதரனே! சிவபெருமானுக்கு உகப்பான தேவாரத் திருப்பதிகங்களைத் திருஞான சம்பந்தராக அவதரித்துப் பாடியருளிய இளையவனே! அறுபடைவீடுகளிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!</em></p><p align="justify"><em>இழிவு மிகுந்ததான பிறவிப் பிணி என்னை இதற்குமேல் அணுகாத வண்ணமாக; உனது திருவருளாகிய ஞானத்தை அடியேனுக்கு அருளி, என் வினைகளைத் தீர்த்து, அடியேனுக்கு விலங்காகப் பூட்டப்பட்டுள்ள நாணம் என்னும் தளையை அறுத்து, நான் என்றென்றும் உன் அடிமையாக விளங்குவதற்கான திருவருளைப் புரிந்தருள வேண்டும்.</em></p>