பகுதி - 300
வெள்ளிகரம் என்னும் திருத்தலத்துக்கான பாடல் இது. இத்தலம் அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிமீ தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவிலுள்ளது.
வெள்ளிகரம் என்னும் திருத்தலத்துக்கான பாடல் இது. இத்தலம் அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிமீ தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவிலுள்ளது.
‘சும்மா இரு சொல்லற’ என்று இறைவன் சொன்னதனாலோ என்னவோ அருணகிரியாரின் பாடல்கள் பல இடங்களில் ‘சும்மா இருத்தல்’ என்னும் மௌன நிலையைக் கேட்பதாக இருக்கும்.
சொல்லுகைக் கில்லையென்று எல்லாமிழந்து சும்மா விருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல கொல்லியைச்
சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்னல் வல்லபமே.
என்பார் கந்தரலங்காரத்திலும். அந்தச் ‘சும்மா இருக்கும் எல்லை’தான் இன்றைய பாடலில் சொல்லப்படும், ‘மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே’ என்பதும். அடிக்கு இருபத்தைந்து எழுத்துகள் உள்ள பாடல். இரண்டாம் அரையடியான மடக்கடியில் தய்ய, தந்த என்னும் ஓசைகளைப் பெற்று வருகிறது. பாடலைப் பார்ப்போம்.
Advertisement
தனதன தனன தனதன தனன
தய்ய தனத்த தந்த தனதானா
அடலரி மகவு விதிவழி யொழுகு
மைவரு மொய்க்கு ரம்பை யுடனாளும்
அலைகட லுலகி லலம்வரு கலக
வைவர்த மக்கு டைந்து தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
டெல்லைவி டப்ர பஞ்ச மயல்தீர
எனதற நினது கழல்பெற மவுன
வெல்லைகு றிப்ப தொன்று புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
வள்ளை யெனத்த யங்கு மிருகாதும்
மரகத வடிவு மடலிடை யெழுதி
வள்ளிபு னத்தில் நின்ற மயில்வீரா
விடதர திகுண ரசசிதர் நிமலர்
வெள்ளிம லைச்ச யம்பு குருநாதா
விகசித கமல பரிபுர முளரி
வெள்ளிக ரத்த மர்ந்த பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273298049&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>