முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 301

வள்ளிப் பெருமாட்டியின் வடமணிந்த மார்பும் அழகிய முகமும் செவிகளும், மரகதப் பச்சை நிறமும் விளங்கித் தோன்றுமாறு

Updated On : 12 ஜூலை, 2016 at 4:31 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:12 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்) ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும்

Advertisement

 

அடல்: வலிமை; அரி: திருமால்; அரிமகவு: பிரமன்; ஐவர்: ஐந்து புலன்கள்; மொய்: மொய்த்த, நெருங்கியுள்ள; குரம்பை: கூடு, குடில் எனவே உடல்;

அலைகடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி

 

அலம்: துன்பம்; கலக ஐவர்: கலகம் செய்யும் ஐம்புலன்கள்; உடைந்து: மனமுடைந்து, கலங்கி;

இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர

 

உளம் உரை உடலொடு: மனம், பேச்சு, உடல் இவற்றோடு; எல்லை: உலகிலே ஈடுபடுகின்ற எல்லை;

எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே

 

எனது அற: நான், எனது என்பவை ஒழிய;

வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும்

 

வடமணி: மணிவடம்; வள்ளை: காதுக்கு உவமை சொல்லப்படும் ஒரு கொடி, கொடியின் பூ; தயங்கும்: விளங்கும்;

மரகத வடிவும் மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா

 

மடலிடை எழுதி: மடலிலே சித்திரமாகத் தீட்டி (மடலூர்தல் பற்றி விளக்கத்தில் காண்க);

விடதர் அதி குணர் அ சசிதர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா

 

விடதர்: விடத்தைத் தரித்தவர்; அ: அந்த; சசி: சந்திரன்; சசிதர்: சந்திரனைத் தரித்தவர்; சயம்பு: சுயம்பு, தான்தோன்றி;

விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே.

 

விகசிதம்: மலர்ந்த;

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273298049&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்)</strong> ... வலிமையுள்ளவராகிய திருமாலின் மகனான பிரமன் எழுதி வைத்துள்ள விதியின் வழியிலே செல்கின்ற,</p><p align="justify"><strong>ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும்</strong> ... (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஐந்து புலன்களும் மொய்த்துக் கொண்டு (ஒன்றாகச் சேர்ந்து) இயங்குகின்ற உடலோடு அனுதினமும்,</p><p align="justify"><strong>அலைகடல் உலகில் அலம் வரு கலக</strong> ... கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பத்தை உண்டாக்கிக் கலகங்களைச் செய்யும்,</p><p align="justify"><strong>ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி</strong> ... (மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற) புலன்களால் மனத்திண்மை உடைந்துபோய்த் தடுமாற்றம் கொண்டு,</p><p align="justify"><strong>இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு</strong> ... துன்பங்களுக்கு ஆளாகும் அடியேனுயை மனம் வாக்கு காயம் இந்த மூன்றும்,</p><p align="justify"><strong>எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர</strong> ... உலக விஷயங்களிலே ஈடுபடுவதிலிருந்து விலகவும்; உலக மயக்கம் ஒழியவும்;</p><p align="justify"><strong>எனது அற நினது கழல் பெற</strong> ... நான் எனது எனப்படும் அகங்கார மமகாரங்கள் அழியவும்;</p><p align="justify"><strong>மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே</strong> ... மௌனமாய் இருப்பதன் எல்லையை உணர்த்துவதாகி ஒரு உபதேசத்தை மொழிந்தருளவேண்டும்.</p><p align="justify"><strong>வட மணி முலையும் அழகிய முகமும்</strong> ... (வள்ளியம்மையுடைய) வடம் அணிந்த மார்பகத்தையும், அழகான முகத்தையும்,</p><p align="justify"><strong>வள்ளை என தயங்கும் இரு காதும் மரகத வடிவும்</strong> ... வள்ளைப் பூவைப் போல விளங்குகின்ற இரண்டு காதுகளையும்; மரகதப் பச்சை நிறத்தையும்;</p><p align="justify"><strong>மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா</strong> ... சித்திரமாகத் தீட்டிக் கொண்டு வள்ளியம்மை இருந்த புனத்திலே (அவற்றைப் பிடித்தவண்மாக) நின்ற மயில் வீரனே!</p><p align="justify"><em>(காதலைப் பெறுவதற்காக காதலியின் உருவத்தை வரைந்து அதை ஏந்திய வண்ணம் மடலூர்வது ஒரு வழக்கம்)</em></p><p align="justify"><strong>விடதர் அதி குணர் சசிதரர் நிமலர்</strong> ... கண்டத்திலே விஷத்தைத் தரித்தவரும்; மேலான குணத்தை உடையவரும்; சந்திரனைச் சடையில் தரித்தவரும்; பரிசுத்தமானவரும்;</p><p align="justify"><strong>வெள்ளி மலை சயம்பு குருநாதா</strong> ... வெள்ளி மலை எனப்படும் கயிலையை உடையவரும்; சுயம்புவுமான பரமசிவனுடைய குருநாதனே!</p><p align="justify"><strong>விகசிதம் கமல பரிபுர முளரி</strong> ... மலர்ந்த கமலத்தைப் போன்றதும்; சிலம்பை அணிந்ததுமான திருவடித் தாமரைகளை உடையவனே!</p><p align="justify"><strong>வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே.</strong> ... வெள்ளிகரம் என்ற தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!</p><p align="justify"> </p><p align="justify"><em>சுருக்க உரை</em></p><p align="justify"><em>வள்ளிப் பெருமாட்டியின் வடமணிந்த மார்பும் அழகிய முகமும் செவிகளும், மரகதப் பச்சை நிறமும் விளங்கித் தோன்றுமாறு சித்திரமாகத் தீட்டி, அதை அம்மை இருந்த தினைப்புனத்திலே பிடித்தபடி நின்றவனே!  கண்டத்தில் ஆலகால நஞ்சைத் தரித்தவரும்; மேலான குணத்தை உடையவரும்; சந்திரனைச் சடையிலே தரித்தவரும்; பரிசுத்தமானவரும்; கயிலை மலையை உடையவரும் சுயம்புவமான பரமசிவனுடைய குருநாதனே!  சிலம்பை அணிந்த, மலர்ந்த கமலத்தைப் போன்ற திருவடித் தாமரைகளை உடையவனே!  வெள்ளிகரம் என்னும் தலத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே!</em></p><p align="justify"><em>பிரமன் எழுதிவைத்த விதியின்படி நடக்கின்ற ஐந்து புலன்களும்; சுவை, ஒளி, தொடு உணர்ச்சி, ஓசை, நாற்றம் எனும் ஐந்துவகை உணர்ச்சிகளும் நெருங்கி வேலை செய்கின்ற இந்த உடலைச் சுமந்தபடி அனுதினமும்,</em></p><p align="justify"><em>கலகங்களைச் செய்து துன்பத்தில் தள்ளுகின்ற ஐந்து புலன்களால் மனத்திண்மை உடைந்து, தடுமாறுபவனாகிய அடியேனுடைய மனம் வாக்கு காயம் எனப்படும் மூன்றும் உலக மயக்கங்களிலே ஈடுபட்டு உழலும் நிலை அழியவும்; நான் எனது என்ற கட்டுகள் ஒழியவும், உன்னுடைய திருவடிக்ளைப் பெறவும், மோன நிலையின் எல்லையிலே நிற்பதற்கான உபதேசமொழியை மொழிந்தருள வேண்டும்.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.