பகுதி - 308
என்றார் அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில். அம்மையும் அப்பனுமான இறைவியும் இறைவனும் நம்மை நாடி வந்து, தம் அடியார்களுடைய திருக்கூட்டத்தின் நடுவே இருக்கும்படி செய்து,
புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே
என்றார் அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில். அம்மையும் அப்பனுமான இறைவியும் இறைவனும் நம்மை நாடி வந்து, தம் அடியார்களுடைய திருக்கூட்டத்தின் நடுவே இருக்கும்படி செய்து, நம் சிரத்தில் தம் தாமரைப் பாதங்களைப் பதிக்கிறார்கள் என்றால் மனமே இதற்கு நாம் புண்ணியம் செய்திருக்கிறோம் அல்லவா என்பது பொருள். அடியார் திருக்கூட்டத்தோடு கலந்திருப்பது நாடத் தக்கனவற்றிலெல்லாம் தலையாயது. அதைத்தான் இந்தப் பழநித் தலத்துக்கான பாடலில் குருநாதர் கேட்கிறார்.
அடிக்கு இருபத்தைந்து எழுத்துகளும் இவற்றில் 1, 8, 15, 24, 25 ஆகிய எழுத்துகள் நெடில்; மற்ற அனைத்தும் குறில். இடையின மெய்கள் மட்டும் பயிலும் இந்தப் பாடல் முழுவதிலும் வல்லின மெல்லின மெய்கள் இடம் பெறவில்லை.
இந்தப் பாடலில் இன்னொன்றும் குறிப்பிடத் தக்கது. ‘மனிதரைப் பொய்யாக வாழ்த்திப் பாடாமல்’ இருக்கும் வரத்தைப் பல பாடல்களில் கேட்டுள்ள குருநாதர், தன் பாடல்களில் மனிதர்களைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளாரா என்று பார்த்தால், மூன்று பேரைக் குறிப்பிட்டுள்ளார். மூவரும் முருகன் அடியார்கள். ‘அடியார்கள் நடுவிருக்கப்’ பண்ணும்படிக் கோரும் பாடலில் இது இடம் பெறுவது பொருத்தமானதும்கூட. பிரபுடதேவ மகராஜன் (அதல சேடனாராட); கலிசை சேவகன் (இன்றைய பாடலிலும், ‘சீயுதிரம் எங்கும்’ என்று தொடங்கும் இன்னொரு பாடலிலும்); சோமநாதர் என்னும் ஒரு அன்பர் (ஒருவழிபடாது என்ற சோமநாதன் மடப் பாடல்) ஆகியோரே குருநாதர் குறிப்பிட்டுப் பாடியுள்ள மூன்று மனிதர்கள், முருகன் அடியார்கள். இவர்களில் பிரபுடதேவ மகராஜனைத் தவிர மற்ற இருவரைப் பற்றி இதற்கு மேற்பட்ட விவரங்கள் இல்லை. பாடலைப் பார்ப்போம்.
Advertisement
தான தனனதன தான தனனதன
தான தனனதன தனதானா
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி புனைவோனே
மாக முகுடதிர வீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/274657009&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>