முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 278

கொங்கு நாட்டில் காங்கேயத்துக்கு அருகிலுள்ள பட்டாலியூர் என்ற தலத்துக்கான பாடல் இது.  ‘எனக்கு இந்தச் சமய ஞானமும்

Updated On : 20 ஜூன், 2016 at 5:22 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:02 PM

கொங்கு நாட்டில் காங்கேயத்துக்கு அருகிலுள்ள பட்டாலியூர் என்ற தலத்துக்கான பாடல் இது.  ‘எனக்கு இந்தச் சமய ஞானமும் சாத்திர விவாதங்களும் சண்டைகளும் போதும் போதும் (அலமலம்).  இப்படிப்பட்ட வீணான வழிகளில் நான் அகப்பட்டுக் கொள்ளாமல் எனக்குப் பரகதியைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டுகிறது.

இந்தப் பாடலில் இடம்பெறும் பல சொற்கள் அண்மைக் காலம் வரையிலும், இன்னமும்கூட பேச்சு வழக்கிலும் இலக்கிய ஆட்சியிலும் காணப்பட்ட சொற்கள்.  உதாரணமாக சங்கை என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், ‘சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு சங்கையில் லாதன சங்கையாம்’ என்று பாரதி கண்ணன் – என் சற்குருவில் பாடியிருக்கிறான்.  சங்கையென்றால் சந்தேகம் என்றொரு பொருள்; கணக்கு என்றொரு பொருள்.  சாத்திரங்களில் கணக்கற்றவை சந்தேகத்துக்குரியவை என்று இரண்டு பொருளிலும் பாரதி ஆண்டிருக்கிறான்.  ‘சிலுகிடு’ என்ற சொல் ‘சிலுகு’ என்று பேச்சு வழக்கில் அண்மைக் காலம் வரை வழங்கி வரப்பட்ட ஒன்று  ‘எதுக்கு இப்படி சிலுகு வளக்கற?’ என்று கேட்பார்கள். ‘குனகுதல்’ என்றால் கொஞ்சிப் பேசுதல் என்று பொருள்.

இந்த வளமான மொழியின் சொல்வளம் அருகிச் சிதைந்து கொண்டே வருகிறது.  இந்த வளங்களை நினைவுறுத்தவும் மீட்கவும் இன்றைய பாடலைப் போன்றவை உதவுகின்றன. 

Advertisement

தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
      தந்தத்தத் தான தனதன                   தனதான

சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
         சங்கற்பித் தோதும் வெகுவித           கலைஞானச்
      சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
         சம்பத்துக் கேள்வி யலமல              மிமவானின்
மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
         வந்திக்கப் பேசி யருளிய                சிவநூலின்
      மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
         வம்பிற்சுற் றாது பரகதி                 யருள்வாயே
வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
         வென்றிச்சக் ரேசன் மிகமகிழ்           மருகோனே
      வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
         விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை         வயலூரா
கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
         கொண்டைக்கொப் பாகு முகிலென      வனமாதைக்
      கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
         கொங்கிற்பட் டாலி நகருறை           பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270001393&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.