முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 249

அடர்த்தியாகப் படர்ந்துள்ள தாழை மடலுடைய தழைகள் நெருங்கியுள்ள வயல்கள் நிறைந்த திருவண்ணாமலைத் தலத்தின் திருவீதியில் வீற்றிருப்பவனே!

Updated On : 21 மே, 2016 at 12:13 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:49 PM

பதச் சேதம்

சொற் பொருள்

இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே

Advertisement

 

இடருக்கு இடர் ஆகிய: துன்பத்துக்குமேல் துன்பமாக வரும்;  கால்: காற்று; சிறுகால்: தென்றல்;

இயலை தரு கானகம் முயலை தரு மேனியில் எரியை தரு மா மதி நிலவாலே

 

இயலைத்தரு: தகுதியைக் கொண்ட; முயலைத்தரு: முயல்கறையைக் கொண்ட;

தொடர கொடு வாதையில் அடையக் கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே

 

வாதை: வேதனை; அடையக் கரைமேல்: கரை முழுவதும்; தனி: ஒப்பற்ற;

துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ

 

பூமலர் அணை: பூக்கள் தூவப்பட்ட படுக்கை;

வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடிவேலா

 

முடுகி: விரைந்து; பொருசூரனை: போரிட்ட சூரனை; வடிவேல்: கூர்மையான வேல்;

மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா

 

புனம்: தினைப்புனம்; குறமெய்த் திருமாமகள்: குறவர் குலத்தைச் சேர்ந்தவளும், திருமகளின் மகளுமான வள்ளி;

அடர படர் கேதக மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே

 

அடர: அடர்ந்து, நெருக்கமாக; கேதக மடலின்: தாழை மடலின்;

அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே.

 

அவனி: அவனிக்கும், உலகுக்கும்; திருமாதொடு: திருமாதுக்கும்—உமைக்கும்; இமையாவிழி அமரர்க்கு: தேவர்களுக்கும்;

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/265173870&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>இடருக்கு இடர் ஆகிய கொடுமைக் கணை மேல் வரும் இறுதிச் சிறு கால் வரும் அதனாலே</strong> ... (ஏற்கெனவே இருக்கும் பலவிதமான) துன்பங்களுக்குமேலே துன்பமாக வந்து பாய்கின்ற மன்மதனுடைய பாணங்களாலும்; இறுதியைத் தருவதைப்போல (மரணத்தை உண்டுபண்ணுவதைப் போன்று) வீசுவதான தென்றற் காற்றாலும்;</p><p align="justify"><strong>இயலைத் தரு கானகம் முயலைத் தரு மேனியில் எரியைத் தரு மா மதி நிலவாலே</strong> ... முயல்கறை என்ற களங்கத்தை மேனியில் இயல்பாகக் கொண்ட பெரிய சந்திரனுடைய நிலவொளி நெருப்பைக் கக்குவதாலும்;</p><p align="justify"><strong>தொடரக் கொடு வாதையில் அடையக் கரை மேல் அலை தொலையத் தனி வீசிய கடலாலே</strong> ... நான் தொடர்ந்து வேதனையை அடையும்படி கரையின்மேலே முழுவதுமாக, (கரையின் மேலே பட்டு) அழியும்படி அலைகளை வீசுகின்ற ஒப்பற்ற கடலாலும்;</p><p align="justify"><strong>துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவளத் தகுமோ துயர் தொலையாதோ</strong> ... துணைக்கு ஒருவருமில்லாமல்—தனியாக—மலர்ப்படுக்கையில் கிடக்கின்ற என்னுடைய உயிர் துவண்டு போகிறதே, இது தகுமோ?  இந்தத் துயரம் தீராதோ?</p><p align="justify"><strong>வட பொற் குல மேருவின் முடுகின் பொரு சூரனை மடியச் சுட ஏவிய வடிவேலா</strong>... வடக்கேயுள்ள பொன்மலையான மேருவைப்(போன்ற வடிவத்துடன்) விரைந்து வந்து போரிடுகின்ற சூரபத்மன் இறக்கும்படியும்; சுட்டு எரிக்கும்படியும் கூரிய வேலை வீசியவனே!</p><p align="justify"><strong>மறவக் குலமாம் ஒரு குற மெய்த் திரு மா மகள் மகிழப் புன மேவிய மயில் வீரா</strong>... வேடர் குலத்தைச் சேர்ந்தவளும்; குறத்தியும்; மெய்மையான லக்ஷ்மியின் மகளுமான* வள்ளி மகிழும்படி தின்புனத்தை அடைந்து நின்ற மயில் வீரனே!</p><p align="justify"><em>(வள்ளி தேவானை இருவருமே திருமாலின் கண்ணிலிருந்து உதித்தவர்கள் என்பதால் இலக்குமியின் மகளும் ஆகிறார்கள்.)</em></p><p align="justify"><strong>அடரப் படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணைத் திரு வீதியில் உறைவோனே</strong> ... அடர்த்தியாகப் படர்ந்துள்ள தாழை மடலுடைய தழைகள் நெருங்கியுள்ள வயல்கள் நிறைந்த திருவண்ணாமலைத் தலத்தின் திருவீதியில் வீற்றிருப்பவனே!</p><p align="justify"><strong>அவனித் திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே.</strong> ... இந்த உலகத்துக்கும்; உமையம்மைக்கும்; சிவனாருக்கும்; இமைக்காத விழிகளைக் கொண்ட தேவர்களுக்கும் அரசனாக விளங்கும் பெருமாளே!</p><p align="justify"> </p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>வடக்கேயுள்ள பொன்மயமான மேருமலையைப் போன்ற தோற்றத்துடன் போருக்கு விரைந்துவந்து சண்டையிட்ட சூரன் இறந்துபோகும்படி, சுட்டெரிக்கும் கூர்மையான வேலை அவன்மீது வீசியவனே!  வேடர் குலத்தவளும்; குறத்தியும்; மெய்மை திகழும் இலக்குமி தேவியின் மகளுமான வள்ளி மனம் மகிழும்படி அவள் இருந்த தினைப்புனத்துக்கே விரும்பிச் சென்ற மயில்வீரனே!  அடர்த்தியாய்ப் படர்ந்துள்ள தாழை மடல்களின் தலைகள் நெருக்கமாகப் பரவியுள்ள வயல்கள் நிறைந்த திருவண்ணாமலைத் தலத்தின் திருவீதியில் வீற்றிருப்பவனே!</em></p><p align="justify"><em>துன்பத்துக்குமேல் துன்பம் தருவதைப்போல என்மீது பாயும் மன்மதன் கணைகளாலும்; அவற்றோடு சேர்ந்து வந்து உயிரைப் போக்குவதுபோல வீசும் தென்றல் காற்றாலும்; காட்டு முயலைப் போன்ற கறையைத் தன் இயல்பாகக் கொண்டதாகிய சந்திரன் நெருப்பைப்போலப் பொழியும் நிலவொளியாலும்; நான் கொடிய வேதனையை அடையும்படி மேலும் மேலும் தொடர்ந்து கரையை நிறைத்தபடி வந்து வீசும் அலைகளை உடைய ஒப்பற்ற கடலாலும்; துணைக்கென்று யாருமில்லாமல் தனியளாக இந்த மலர்ப்படுக்கையிலே கிடக்கின்ற எளிய பெண்ணான என்னுடைய உயிர் வாடுவது தகுமோ?  என்னுடைய துக்கம் தீராதோ?  (உயிர்வாட்டம் நீங்கும்படியும், துக்கம் தொலையும்படியும் வந்து என்னை ஆண்டுகொள்ள வேண்டும்.)</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.