பகுதி - 250
திருவாவினன்குடித் திருத்தலத்துக்கான பாடலிது. ‘உன்னுடைய திருப்பாதங்களான அமுதத்தைப் பருகும்படியான ஞானத்தைத்
திருவாவினன்குடித் திருத்தலத்துக்கான பாடலிது. ‘உன்னுடைய திருப்பாதங்களான அமுதத்தைப் பருகும்படியான ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று இறைவனைக் கோருகிறது. முற்றிலும் குற்றெழுத்துகளால் அமைந்துள்ள இந்தப் பாடலில் 8, 17, 26 ஆகிய எழுத்துகளும் கடைசிச் சீரில் இரண்டாம் மூன்றாம் எழுத்துகள் மட்டுமே (ஒற்றொழித்து) நெடிலாக அமைந்திருப்பதைக் காணலாம்.
தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான தனதான
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
Advertisement
முதிர்விலிள தனபார மடவார்தோள்
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல் தலைகீழ்வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி மிகவேயுண்
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான மருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை விடுவோனே
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபனிரு கரதீர முருகோனே
பகர்வரிய ரெனலாகு முகைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு மிளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/265178634&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>