பகுதி - 252
பழனித் தலத்துக்கான பாடல் இது. பிறவிப் பெருங்கடலைத் தாண்டி நற்கதியைப் பெற வேண்டும் பாடல்.
பழனித் தலத்துக்கான பாடல் இது. பிறவிப் பெருங்கடலைத் தாண்டி நற்கதியைப் பெற வேண்டும் பாடல்.
இதன் சந்த அமைப்பை கவனிப்போம். ஒவ்வொரு நான்காம் எழுத்தும் வல்லின மெய். (அணிபட் என்ற முதல் சீரில் நான்காம் எழுத்து ட், டணுகித் என்ற இரண்டாம் சீரில் நான்காம் எழுத்து த்.. இவ்வாறு தொடர்கிறது. முற்றிலும் குற்றெழுத்துகள்; கடைசிச் சீரின் மூன்றாம் எழுத்து மட்டுமே நெடில். இப்படிப்பட்ட அமைப்பு இதற்குக் குதிரை நடை ஓசையைக் கொடுக்கிறது. ஒவ்வொரு அடிக்கும் ஒற்று நீக்கி 22 எழுத்துகள்.
‘பணியப் பணியப் பரமர்ப் பரவ’ என்ற நான்காம் அடியை அப்படியே பார்க்கும் போது ஒருபொருள் தொனித்தாலும் அதை முறைப்படி பிரிக்கும்போதுதான் அருணகிரியார் சொல்லவரும் பொருள் விளங்குகிறது. இப்போது பாடலைப் பார்ப்போம்.
Advertisement
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனதான
அணிபட் டணுகித் திணிபட் டமனத்
தவர்விட் டவிழிக் கணையாலும்
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
தவன்விட் டமலர்க் கணையாலும்
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
பெறுமக் குணமுற் றுயிர்மாளும்
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
பெறுதற் கருளைத் தரவேணும்
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
கனியைக் கணியுற் றிடுவோனே
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறைவைத் திடுவோனே
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற் றொருசொற் பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/265811102&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>