முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 706

என்னை ஆண்டருள வேண்டும்

Updated On : 5 டிசம்பர், 2017 at 10:32 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:33 PM

‘அடியேன் சிவஸ்வரூப மஹாயோகியாகுமறு என்னை ஆண்டருளவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவானைக்காவுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் இரண்டு எழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் இரண்டு நெட்டெழுத்தும் ஒரு குற்றெழுத்துமாக மூன்றெழுத்துகளையும் கொண்டு அமைந்துள்ளன.


தனத்த தான தானான தனத்த தான தானான
      தனத்த தான தானான               தனதான

Advertisement

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
         யடைத்து வாயு வோடாத        வகைசாதித்

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
         அசட்டு யோகி யாகாமல்         மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
         சிரத்தை யாகி யான்வேறெ       னுடல்வேறு

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
         சிவச்சொ ரூப  மாயோகி         யெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
         சுதற்கு நேச மாறாத              மருகோனே

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
         தொடுத்த நீப வேல்வீர           வயலூரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
         மகப்ர வாக பானீய               மலைமோதும்

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
         மதித்த சாமி யேதேவர்           பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.