முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி- 718

என்னை அடிமைகொண்டு ஆண்டருளவேண்டும்

Updated On : 17 டிசம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:52 PM

‘என்னை அடிமைகொண்டு ஆண்டருளவேண்டும்’ என்று கோருகின்ற இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் ஒரு நெடிலைக் கொண்ட மூன்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் கொண்டவை.


தந்ததன தானதன தத்தான
      தந்ததன தானதன தத்தான
      தந்ததன தானதன தத்தான                தனதான

Advertisement

சந்தனச வாதுநிறை கற்பூர
         குங்குமப டீரவிரை கத்தூரி
         தண்புழுக ளாவுகள பச்சீத              வெகுவாச

சண்பகக லாரவகு ளத்தாம
         வம்புதுகி லாரவயி ரக்கோவை
         தங்கியக டோரதர வித்தார             பரிதான

மந்தரம தானதன மிக்காசை
         கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
         வஞ்சகவி சாரஇத யப்பூவை            யனையார்கள்

வந்தியிடு மாயவிர கப்பார்வை
         அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
         வந்தடிமை யாளஇனி யெப்போது        நினைவாயே

இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
         சம்ப்ரமம யூரதுர கக்கார
         என்றுமக லாதஇள மைக்கார           குறமாதின்

இன்பஅநு போகசர சக்கார
         வந்தஅசு ரேசர்கல கக்கார
         எங்களுமை சேயெனரு மைக்கார       மிகுபாவின்

செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
         குன்றெறியும் வேலின்வலி மைக்கார
         செஞ்சொலடி யார்களெளி மைக்கார     எழில்மேவும்

திங்கள்முடி நாதர்சம யக்கார
         மந்த்ரவுப தேசமகி மைக்கார
         செந்தினகர் வாழுமரு மைத்தேவர்      பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.