முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 458

இப்பாடல் பழநித் தலத்துக்கானது.

Updated On : 22 ஜனவரி, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:18 PM

ஆதரவற்ற நிலையில் தனித்திருக்கும் உன் திருவடிகளைத் தந்து ஆதரித்து அருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் பழநித் தலத்துக்கானது. 

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்; தொங்கல் சீர் ஒன்று நீங்கலாக மற்ற எல்லாச் சீர்களும் குறில்.  நெடில் பயிலவில்லை. 

தனன தனன தனன தனன
     தனன தனன                        தனதான

தமரு மமரு மனையு மினிய 
         தனமு மரசும்                    அயலாகத்
      தறுகண் மறலி முறுகு கயிறு 
         தலையை வளைய               எறியாதே
கமல விமல மரக தமணி 
         கனக மருவு                     மிருபாதங் 
      கருத அருளி யெனது தனிமை 
         கழிய அறிவு                     தரவேணும் 
குமர சமர முருக பரம 
         குலவு பழநி                      மலையோனே 
      கொடிய பகடு முடிய முடுகு 
         குறவர் சிறுமி                    மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு 
         மழிய அமர்செய்                 தருள்வோனே 
      அறமு நிறமு மயிலு மயிலு 
         மழகு முடைய                   பெருமாளே.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.