பகுதி - 462
இப்பாடல் வடகூர் என்ற தலத்துக்கானது.
இப்பாடல் வடகூர் என்ற தலத்துக்கானது. இத்தலம் புதுச்சேரிக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிருக்கிறது என்பது உரையாசிரியர் குகஸ்ரீ தணிகைமணியவர்களுடைய குறிப்பால் தெரிகிறது. முருகனுடைய திருவடிகளைத் தொழும் பேறு ஒன்றையே வரமாகக் கேட்கும் பாடல் இது.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் எல்லா எழுத்துகளும் குறில்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒவ்வொரு மூன்றாவது எழுத்தும் நெடில்.
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா தனதான
Advertisement
அரியய னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையே வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே வியநாதர்
மனமகிழ் குமரா எனவுள திருதாள்
மலரடி தொழுமா றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர் பெருமாளே.