பகுதி - 598
‘மனநாசத்தைக்’ கோரும் இந்தப் பாடல்
ரமணர் சொல்வதைப் போன்ற ‘மனநாசத்தைக்’ கோரும் இந்தப் பாடல் கருவூருக்கு அருகே இருக்கும் திருவெஞ்சமாக்கூடல் என்ற தலத்துக்குரியது. இப்பாடலில் ‘வேற்கானத்து உறைவோனே’ என்று வரும் இடத்தில் திருவேற்காடு குறிக்கப்படுகிறது. இங்கே உள்ள முருகன் ஆலயம் வேறு தற்போது திருவேற்காடு என்றாலே நினைக்கு வரும் ஆலயம் வேறு என்பதை இதற்கு முன்னாலும் குறித்திருக்கிறோம்.
அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகள் என்ற மிகச் சிறிய தாள அமைப்பைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளும், ஒரு நெட்டெழுத்தும் இடையில் பயிலும் (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் அமைந்தவை. இரண்டு நான்கு ஆகிய சீர்கள் ஒரு நெடிலும், ஒரு குறிலும், ஒரு வல்லொற்றுமாய் அமைந்தவை.
தந்தனாத் தானத் தனதான
வண்டுபோற் சாரத் தருள்தேடி
மந்திபோற் காலப் பிணிசாடிச்
Advertisement
செண்டுபோற் பாசத் துடனாடிச்
சிந்தைமாய்த் தேசித் தருள்வாயே
தொண்டராற் காணப் பெறுவோனே
துங்கவேற் கானத் துறைவோனே
மிண்டராற் காணக் கிடையோனே
வெஞ்சமாக் கூடற் பெருமாளே.