பகுதி - 600
நற்கதியைக் கோரும் இப்பாடல்
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:51 PM
நற்கதியைக் கோரும் இப்பாடல், ஈரோட்டுக்கு அருகிலுள்ள திருக்கொடுமுடி என்ற தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளையும் எளிய சந்த அமைப்பையும் கொண்ட பாடல். இருப்பதே (ஒரேபோன்ற) இரண்டு சீர்கள்தான் என்பதால் அமைப்புக் கணக்கைத் தவிர்க்கின்றோம்.
தனதனத் தனனத் தனதான
Advertisement
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் புகுதாதே
திருவருட் கருணைப் ப்ரபையாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ
அரியயற் கறிதற் கரியோனே
அடியவர்க் கெளியற் புதநேயா
குருவெனச் சிவனுக் கருள்போதா
கொடுமுடிக் குமரப் பெருமாளே.