முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 666

பிறப்பும் இறப்புமாகச் சுழல்கின்ற பிறவிப் பிணி

Updated On : 16 அக்டோபர், 2017 at 11:02 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:23 PM

பிறப்பும் இறப்புமாகச் சுழல்கின்ற பிறவிப் பிணி போய்த் தொலைய வேண்டுகின்ற இந்தத் திருப்புகழ் திருவண்ணாமலைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற நான்கெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற இரண்டெழுத்துகளையும் கணக்கில் சேராத ஒரு வல்லொற்றையும் கொண்டவை.

தானதன தானத் தானதன தானத்
      தானதன தானத் தனதான

Advertisement

பேதகவி ரோதத் தோதகவி நோதப்
         பேதையர்கு லாவைக் கண்டுமாலின்

பேதைமையு றாமற் றேதமக லாமற்
         பேதவுடல் பேணித் தென்படாதே

சாதகவி காரச் சாதலவை போகத்
         தாழ்விலுயி ராகச் சிந்தையாலுன்

தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
         சாரல்மற மானைச் சிந்தியேனோ

போதகம யூரப் போதகக டாமற்
         போதருணை வீதிக் கந்தவேளே

போதகக லாபக் கோதைமுது வானிற்
         போனசிறை மீளச் சென்றவேலா

பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
         பாருலகு வாழக் கண்டகோவே

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
         பாடுமவர் தோழத் தம்பிரானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.