முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 668

மாதர் மீதுள்ள மயக்கத்தை

Updated On : 18 அக்டோபர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:24 PM

மாதர் மீதுள்ள மயக்கத்தை அறுக்கக் கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற் சீரில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; இரண்டாவது சீரில் குறில்-நெடில்-குறில் என மூன்றெழுத்துகளும்; மூன்றாம் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு வல்லின ஒற்றும் அமைந்துள்ளன.


தான தனான தத்த தனதானா

Advertisement

கீத விநோத மெச்சு  குரலாலே
      கீறு மையார் முடித்த குழலாலே

நீதி யிலாத ழித்து முழலாதே
      நீமயி லேறி யுற்று வரவேணும்

சூதமர் சூர ருட்கப் பொருசூரா
      சோண கிரியி லுற்ற குமரேசா

ஆதியர் காதொ ருச்சொ லருள்வோனே
      ஆனைமுகார் கனிட்ட பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.