பகுதி - 672
பசியாலும் நோயாலும் வாடுவதான
பசியாலும் நோயாலும் வாடுவதான இந்த உடலோடு பிணிக்கப்பட்டிருக்கின்ற பிறவிப் பிணியை அறுத்தருள வேண்டும் என்று கோருகின்ற இப்பாடல் திருத்தணிக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். எல்லாச் சீர்களும் ஒரேமாதிரியான அமைப்பைக் கொண்டவை. எல்லாச் சீர்களிலும் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு வல்லொற்றுகளும் அமைந்துள்ளன. மெல்லொற்று எதுவும் கலக்காத பாடல்.
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் தனதான
Advertisement
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப் பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
பசிக்குடற் கடத்தினைப் பயமேவும்
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப் புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே
கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
கழித்தமெய்ப் பதத்தில்வைத் திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
கதித்தநற் றிருப்புயத் தணைவோனே
செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைக்
சிரித்தெரித் தநித்தப்பொற் குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.