முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 892

எனது கலி நீங்கப்பெற

Updated On : 11 ஆகஸ்ட், 2018 at 5:42 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:58 PM

‘எனது கலி நீங்கப்பெற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தனதன தனன தனதன

Advertisement

      தனன தனதன தனன தனதன

      தனன தனதன தனன தனதன             தனதான

கமரி மலர்குழல் சரிய புளகித

         கனக தனகிரி யசைய பொருவிழி

         கணைக ளெனநுதல் புரள துகிலதை    நெகிழ்மாதர்

      கரிய மணிபுர ளரிய கதிரொளி

         பரவ இணைகுழை யசைய நகைகதிர்

         கனக வளைகல நடைகள் பழகிகள்      மயில்போலத்

திமிரு மதபுழு கொழுக தெருவினி

         லலைய விலைமுலை தெரிய மயல்கொடு

         திலத மணிமுக அழகு சுழலிக         ளிதழூறல்

      திரையி லமுதென கழைகள் பலசுளை

         யெனவு மவர்மயல் தழுவு மசடனை

         திருகு புலைகொலை கலிகள் சிதறிட   அருள்தாராய்

குமர குரபர குமர குருபர

         குமர குருபர குமர குருபர

         குமர குருபர குமர குருபர              எனதாளங்

      குரைசெய் முரசமொ டரிய விருதொலி

         டமர டமடம  டமட டமவென

         குமுத திமிலைச லரிகி னரிமுத        லிவைபாட

அமரர் முநிவரு மயனு மனைவரு

         மதுகை மலர்கொடு தொழுது பதமுற

         அசுரர் பரிகரி யிரத முடைபட           விடும்வேலா

      அகில புவனமொ டடைய வொளிபெற

         அழகு சரண்மயில் புறம தருளியொ

         ரருண கிரிகுற மகளை மருவிய        பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.