முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 896

அவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா..

Updated On : 17 ஆகஸ்ட், 2018 at 10:55 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:01 PM

‘அவன் என்னையாட்கொள்ள மாட்டானா’ என்று நாரையை விளித்துக் கேட்பதைப் போன்று அமைந்திருக்கும் இந்தப் பாடல் நாயக-நாயகி பாவத்தில் அமைந்தது; திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்றுமுதல் ஐந்து வரையிலான எல்லாச் சீர்களிலும் இரண்டு நெட்டெழுதுகளும்; ஆறாவது சீரில் ஒரு நெடில், ஒரு குறில் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ன.

தானா தானா தானா தானா

Advertisement

      தானா தானத்                       தனதான

கூர்வாய் நாராய் வாராய் போனார்

         கூடா ரேசற்                      றலஆவி

      கோதா னேன்மா தாமா றானாள்

         கோளே கேழ்மற்                 றிளவாடை

ஈர்வாள் போலே மேலே வீசா

         ஏறா வேறிட்                     டதுதீயின்

      ஈயா வாழ்வோர் பேரே பாடா

         ஈடே றாரிற்                      கெடலாமோ

சூர்வா ழாதே மாறா தேவாழ்

         சூழ்வா னோர்கட்                 கருள்கூருந்

      தோலா வேலா வீறா ரூர்வாழ்

         சோதீ பாகத்                      துமையூடே

சேர்வாய் நீதீ வானோர் வீரா

         சேரா ரூரைச்                    சுடுவார்தஞ்

      சேயே வேளே பூவே கோவே

         தேவே தேவப்                    பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.