முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 898

உனது திருவடிகளை நினைக்க வேண்டும்..

Updated On : 19 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:02 PM

 

‘உனது திருவடிகளை நினைக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 23 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடில், ஒரு குறில் என மூனறெழுத்துகளும்; ஆறாம் சீரில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

Advertisement

தனதன தனன தனதன தனன

      தானான தந்த                       தனதான

 

மகரம துகெட இருகுமி ழடைசி

         வாரார்ச ரங்க                    ளெனநீளும்

      மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்

         வாணாள டங்க                  வருவார்தம்

பகர்தரு மொழியில் ம்ருகமத களப

         பாடீர கும்ப                      மிசைவாவிப்

      படிமன துனது பரிபுர சரண

         பாதார விந்த                     நினையாதோ

நகமுக சமுக நிருதரு மடிய

         நானாவி லங்கல்                 பொடியாக

      நதிபதி கதற வொருகணை தெரியு

         நாராய ணன்றன்                 மருகோனே

அகனக கனக சிவதல முழுது

         மாராம பந்தி                     யவைதோறும்

      அரியளி விததி முறைமுறை கருது

         மாரூர மர்ந்த                    பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.