பகுதி - 898
உனது திருவடிகளை நினைக்க வேண்டும்..
‘உனது திருவடிகளை நினைக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 23 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடில், ஒரு குறில் என மூனறெழுத்துகளும்; ஆறாம் சீரில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.
Advertisement
தனதன தனன தனதன தனன
தானான தந்த தனதான
மகரம துகெட இருகுமி ழடைசி
வாரார்ச ரங்க ளெனநீளும்
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
வாணாள டங்க வருவார்தம்
பகர்தரு மொழியில் ம்ருகமத களப
பாடீர கும்ப மிசைவாவிப்
படிமன துனது பரிபுர சரண
பாதார விந்த நினையாதோ
நகமுக சமுக நிருதரு மடிய
நானாவி லங்கல் பொடியாக
நதிபதி கதற வொருகணை தெரியு
நாராய ணன்றன் மருகோனே
அகனக கனக சிவதல முழுது
மாராம பந்தி யவைதோறும்
அரியளி விததி முறைமுறை கருது
மாரூர மர்ந்த பெருமாளே.