முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 901

கலை மேவு ஞானபிரகாச..

Updated On : 23 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:04 PM

பதச் சேதம்

சொற் பொருள்

கலை மேவு ஞானபிரகாச

Advertisement

 

கலை மேவு(ம்): கலைகள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய;

கடல் ஆடி ஆசை கடல்ஏறி

 

 

பலம் ஆய வாதில்பிறழாதே

 

பலமாய: பலம் பொருந்திய, வலிமை வாய்ந்த;

பதி ஞான வாழ்வைதருவாயே

 

 

மலை மேவு மாயகுறமாதின்

 

 

மனம் மேவு வாலகுமரேசா

 

வால: இளைய;

சிலை வேட சேவல்கொடியோனே

 

சிலை வேட: வில் ஏந்திய வேடனே;

திருவாணி கூடல்பெருமாளே.

 

திரு வாணி கூடல்: திருமகளும் கலைமகளும் பொருந்தியுள்ள கூடல்—மதுரை;

கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி... எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கின்ற ஞான ஒளியாகிய கடலிலே குளித்து,

ஆசைக் கடலேறி... (மண், பெண், பொன் என்ற) மூவாசைகளான கடல்களைக் கடந்து கரையேறி,

பலமாய வாதிற் பிறழாதே...பலமாக நடைபெறும் சமய வாதங்களிலே நான் அகப்பட்டு, மாறுபட்டுக் கிடக்காமல்,

பதிஞான வாழ்வைத் தருவாயே... கடவுளைப் பற்றிய சிவஞான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

மலைமேவு மாயக் குறமாதின்... வள்ளி மலையிலே இருந்தவளும், ஆச்சரியகரமான தோற்றத்தைக் கொண்டவளும் குறமகளுமான வள்ளியின்,

மனமேவு வாலக் குமரேசா... மனத்திலே குடியிருக்கின்ற இளம் குமரேசா!

சிலைவேட... (பொய்யாமொழிப் புலவருக்காக) வில்லேந்திய வேடனின் கோலத்திலே வந்தவனே!

சேவற் கொடியோனே... சேவற்கொடியை ஏந்தியிருப்பவனே!

திருவாணி கூடற் பெருமாளே.... திருமகளும் கலைமகளும் பொருந்தியிருக்கின்ற மதுரையம்பதியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

வள்ளிமலையில் இருந்தவளும் ஆச்சரியகரமான தோற்றத்தை உடையவளும் குறப்பெண்ணுமான வள்ளியின் மனத்திலே வீற்றிருப்பவனே!  பொய்யாமொழிப் புலவருக்காக (அல்லது வள்ளிக்காக) வில்லை ஏந்திய வேடனின் வடிவத்திலே வந்தவனே! சேவற்கொடியை ஏந்தியிருப்பவனே!  திருமகளும் கலைமகளும் பொருந்தி விளங்குகின்ற மதுரையிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிற ஞான ஒளியே!  உன்னிலே குளித்து, மூவாசைகளான கடலிலிருந்து கரையேறி; வலுவான சமய வாதங்களிலே நான் மாறுபட்டுக் கிடக்காதபடி எனக்குச் சிவஞான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

வள்ளிமலையில் இருந்தவளும் ஆச்சரியகரமான தோற்றத்தை உடையவளும் குறப்பெண்ணுமான வள்ளியின் மனத்திலே வீற்றிருப்பவனே!  பொய்யாமொழிப் புலவருக்காக (அல்லது வள்ளிக்காக) வில்லை ஏந்திய வேடனின் வடிவத்திலே வந்தவனே! சேவற்கொடியை ஏந்தியிருப்பவனே!  திருமகளும் கலைமகளும் பொருந்தி விளங்குகின்ற மதுரையிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிற ஞான ஒளியே!  உன்னிலே குளித்து, மூவாசைகளான கடலிலிருந்து கரையேறி; வலுவான சமய வாதங்களிலே நான் மாறுபட்டுக் கிடக்காதபடி எனக்குச் சிவஞான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.