முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி -900

ஞான வாழ்வைக் கோரும்..

Updated On : 22 ஆகஸ்ட், 2018 at 11:01 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:04 PM

ஞான வாழ்வைக் கோரும் இந்தப் பாடல் மதுரைக்கானது.  சிலர் இதனை ஈரோடு, பவானிக்கு உரியது என்றும் கருதுகிறார்கள்.

அடிக்கு 20 எழுத்துகள் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு ஆகிய தொங்கல் சீர்களில் ஒரு நெடிலுடன் கூடிய நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதான தானத்                                                      தனதான

Advertisement

கலைமேவு ஞானப்                                                 பிரகாசக்

      கடலாடி ஆசைக்                                         கடலேறிப்

பலமாய வாதிற்                                                      பிறழாதே

            பதிஞான வாழ்வைத்                                 தருவாயே

மலைமேவு மாயக்                                                 குறமாதின்

            மனமேவு வாலக்                                        குமரேசா

சிலைவேட சேவற்                                                 கொடியோனே

            திருவாணி கூடற்                                       பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.