முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 738

துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக்

Updated On : 17 ஜனவரி, 2018 at 6:07 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:30 PM

‘துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் காத்து அருளவேண்டும்’ என்று வேண்டும் இந்தப் பாடல் விருத்தாசலத்துக்கு உரியது.

குறுவண்ணம் என்னும் வகையில் அனைத்தும் குற்றெழுத்துக்களாலேயே அமைந்திருக்கின்ற இந்தப் பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள் உள்ளன.  ஒன்று முதல் ஆறுவரையிலான எல்லாச் சீர்களிலும் சம அளவில் நான்கு நான்கு குற்றெழுத்துகள் பயில்கின்றன.


தனதன தனதன தனதன தனதன
      தனதன தனதன                     தனதான

Advertisement

திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
         செயமுன மருளிய               குளவோனே

திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
         தெறிபட மறுகிட                 விடுவோனே

ஒருவரு முனதருள் பரிவில லவர்களி
         னுறுபட ருறுமெனை             யருள்வாயோ

உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
         ஒருநொடி தனில்வரு             மயில்வீரா

கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
         கணினெதிர் தருவென            முனமானாய்

கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
         கருணையில் மொழிதரு          முதல்வோனே

முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
         முரணுறு மசுரனை               முனிவோனே

முடியவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
         முதுகிரி வலம்வரு               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.