முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 740

உன்னுடைய திருவடி மலரை அடையவேண்டும்

Updated On : 19 ஜனவரி, 2018 at 10:56 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:31 PM

‘உன்னுடைய திருவடி மலரை அடையவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவாரூக்குப் போகும் வழியில் இருக்கும் விஜயபுரம் என்னும் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளை உடைய பாடல் இது.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்று எழுத்துகளையும் கொண்டு அமைந்திருக்கின்றன.


தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
      தனதன தந்தன தானன தனதான

Advertisement

குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
         குளுகுளெ னும்படி மூடிய மலமாசு

குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
         குமிழியி னுங்கடி தாகியெ யழிமாய

அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
         லவுடத மும்பல யோகமு முயலாநின்

றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
         னழகிய தண்டைவி டாமல ரடைவேனோ

இடமற மண்டுநி சாசர ரடையம டிந்தெழு பூதர
         மிடிபட இன்பம கோததி வறிதாக

இமையவ ருஞ்சிறை போயவர் பதியுளி லங்கவி டாதர
         எழில்பட மொன்றுமொ ராயிர முகமான

விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
         வெயில்நகை தந்தபு ராரிம தனகோபர்

விழியினில் வந்துப கீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
         விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.