முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 744

உனது தரிசனத்தைத் தந்தருள வேண்டும்

Updated On : 23 ஜனவரி, 2018 at 11:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:33 PM

‘உனது தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கேட்கின்ற இப்பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித் 14 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) ஒரு மெல்லொற்றும் ஒரு வல்லொற்றும் அமைந்துள்ளன.


தனதனன தனன தந்தத்                   தனதானா

Advertisement

இருவினையின் மதிம யங்கித்             திரியாதே
      எழுநரகி லுழலு நெஞ்சுற்            றலையாதே

பரமகுரு அருள்நி னைந்திட்                டுணர்வாலே
      பரவுதரி சனையை யென்றெற்       கருள்வாயே

தெரிதமிழை யுதவு சங்கப்                 புலவோனே
      சிவனருளு முருக செம்பொற்        கழலோனே

கருணைநெறி புரியு மன்பர்க்               கெளியோனே
      கனகசபை மருவு கந்தப்             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.