பகுதி - 826
அடியேனுக்கு நிறைய வரங்களை...
‘அடியேனுக்கு நிறைய வரங்களை அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) நான்காவது எழுத்து வல்லொற்றாகவும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) இரண்டாவது எழுத்து வல்லொற்றாகவும் அமைந்துள்ளன.
தனனத் தத்தன தனதான
Advertisement
பரவைக் கெத்தனை விசைதூது
பகரற் குற்றவ ரெனமாணுன்
மரபுக் குச்சித ப்ரபுவாக
வரமெத் தத்தர வருவாயே
கரடக் கற்பக னிளையோனே
கலைவிற் கட்குற மகள்கேள்வா
அரனுக் குற்றது புகல்வோனே
அயனைக் குட்டிய பெருமாளே.