பகுதி - 828
அநுபூதி அளித்தருள வேண்டும்..
828
‘அநுபூதி அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாக இருக்கும் தொங்கல் சீர்களில் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
Advertisement
தான தனத்த தனதான
நாளு மிகுத்த கசிவாகி
ஞான நிருத்த மதைநாடும்
ஏழை தனக்கு மனுபூதி
ராசி தழைக்க அருள்வாயே
பூளை யெருக்கு மதிநாக
பூண ரளித்த சிறியோனே
வேளை தனக்கு சிதமாக
வேழ மழைத்த பெருமாளே.