முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 828

அநுபூதி அளித்தருள வேண்டும்..

Updated On : 16 மே, 2018 at 3:43 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:34 PM

828

‘அநுபூதி அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாக இருக்கும் தொங்கல் சீர்களில் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

Advertisement

தான தனத்த                              தனதான

நாளு மிகுத்த                             கசிவாகி

      ஞான நிருத்த                       மதைநாடும்    

ஏழை தனக்கு                             மனுபூதி

      ராசி தழைக்க                       அருள்வாயே

பூளை யெருக்கு                           மதிநாக

      பூண ரளித்த                        சிறியோனே

வேளை தனக்கு                           சிதமாக

      வேழ மழைத்த                      பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.