பகுதி - 829
நாளும் மிகுத்த கசிவாகி..
பதச் சேதம் | சொற் பொருள் |
நாளும் மிகுத்த கசிவாகி Advertisement
| கசிவாகி: நெகிழ்ச்சி அடைந்து; |
ஞான நிருத்தம் அதை நாடும்
| நிருத்தம்: நடனம் |
ஏழை தனக்கும் அனுபூதி
| அனுபூதி: அனுபவ ஞானம்; |
ராசி தழைக்க அருள்வாயே
| ராசி: யோகம், பாக்கியம்; |
பூளை எருக்கு மதி நாக(ம்)
| பூளை: ஒருவகைப் பூ—சிவபெருமான் சூடுவது; மதி: சந்திரன்; |
பூணர் அளித்த சிறியோனே
| பூணர்: பூண்டவர்; |
வேளை தனக்கு உசிதமாக
| வேளை தனக்கு: சமயத்துக்கு; உசிதமாக: ஏற்றாற்போல; |
வேழம் அழைத்த பெருமாளே.
| வேழம் அழைத்த: யானையை வரவழைத்த (வள்ளியை அச்சுறுத்துவதற்காக விநாயகனை வரவழைத்தது.) |
நாளு மிகுத்த கசிவாகி... எப்போதும் அன்பினால் மனம் நெகிழ்ந்தபடி,
ஞான நிருத்தம் அதைநாடும்... உனது ஞான நடனத்தைக் காண விரும்புகின்ற,
ஏழை தனக்கும் அநுபூதி... எளியேனுக்கும் ஞான அனுபவம் என்கின்ற,
எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும்
ராசி தழைக்க அருள்வாயே... பாக்கியம் சித்திக்குமாறு அருள்புரிய வேண்டும்.
பூளை யெருக்கு மதிநாக... பூளைப்பூவையும் எருக்க இலையையும் பிறை நிலவையும் பாம்பையும்
பூண ரளித்த சிறியோனே... சடாமுடியில் தரித்திருப்பவரான சிவனார் அருளிய மகவே!
வேளை தனக்கு உசிதமாக... சமயத்துக்குத் தகுந்ததைப் போல,
வேழ மழைத்த பெருமாளே.... யானையை வரவழைத்த பெருமாளே*!
(தினைப்புனத்தில் வள்ளியை அச்சுறுத்துவதற்காக விநாயகனை வரவழைத்தது.)
சுருக்க உரை
பூளைப் பூவையும் எருக்க இலையையும் பிறை நிலவையும் நாகத்தையும் சடாமுடியில் தரித்தவரான சிவபெருமான் அருளிய பிள்ளையே! உனக்கு வேண்டிய சமயத்திலே (வள்ளியை பயமுறுத்துவதற்காக) விநாயகனை யானையாக வரவழைத்த பெருமாளே!
எப்போதும் மனம் கசிந்துருகி உன்னுடைய ஞான நடனக் கோலத்தைக் காணவிரும் எளியேனாகிய எனக்கு அனுபவ ஞானம் என்னும் பாக்கியம் சித்திக்குமாறு அருளவேண்டும்.