முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 830

அனுபூதியாகிய அனுபவ..

Updated On : 18 மே, 2018 at 2:41 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:34 PM

அனுபூதியாகிய அனுபவ ஞானத்தைக் கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும், இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாக அமைந்திருக்கும் தொங்கல் சீர்களில் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானதன தானனத்                                                                  தனதான

Advertisement

நாரியர்க ளாசையைக்                                                          கருதாதே

                நானுனிரு பாதபத்                                                    மமுநாட

ஆரமுத மானசர்க்                                                                   கரைதேனே

                ஆனஅநு பூதியைத்                                                 தருவாயே

காரணம தானவுத்                                                                   தமசீலா

                கானகுற மாதினைப்                                              புணர்வோனே

சூரர்கிளை தூளெழப்                                                              பொரும்வேலா

                தோகைமயில் வாகனப்                                      பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.