முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 841

இத்தரணி மீதில் பிறவாதே

Updated On : 28 மே, 2018 at 3:10 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:39 PM

பதச் சேதம்

சொற் பொருள்

இத்தரணி மீதில்பிறவாதே

Advertisement

 

 

எத்தரொடு கூடிகலவதே

 

 

முத்தமிழை ஒதிதளராதே

 

 

முத்தி அடியேனுக்குஅருள்வாயே

 

 

தத்துவ மெய் ஞானகுரு நாதா

 

 

சத்த சொருப புத்அமுதோனே

 

சத்த சொருப: ஒலி வடிவினனே;

நித்திய க்ருதா நல்பெரு வாழ்வே

 

க்ருதா: (நற்செய்கைகளைச்) செய்பவனே;

நிர்த்த ஜெக ஜோதிபெருமாளே.

 

நிர்த்த: ஆடல் வல்ல;

இத்தரணி மீதிற் பிறவாதே... (அடியேன்) இந்த உலகத்திலே பிறக்காமலும்,

எத்தரொடு கூடிக் கலவாதே... எத்தர்களோடு நட்புகொண்டு திரியாமலும்,

முத்தமிழை யோதித் தளராதே... எப்போதும் முத்தமிழை (மட்டுமே) சொல்லிச் சொல்லிச் சோர்வடையாலும்,

முத்தி அடியேனுக்கு அருள்வாயே...அடியேனுக்கு முக்தி நிலையைத் தந்தருள வேண்டும்.

தத்துவமெய்ஞ் ஞானக்குருநாதா... உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசிக்கின்ற குருமூர்த்தியே!

சத்தசொருபா புத்தமுதோனே... நாத வடிவாகத் திகழ்பவனே! புதிய அமுதத்தைப் போன்றவனே!

நித்தியக்ருதா நற் பெருவாழ்வே... எப்போதும் எனக்கு நன்மைகளையே செய்பவனே! என்னுடைய பெருஞ்செல்வமே!

நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே.... ஆடல் வல்லோனே! எல்லா உலகங்களுக்கும் பேரொளியாக விளங்குபவனே”

சுருக்க உரை

உண்மைப் பொருளான மெய்ஞ்ஞானத்தை உபதேசிக்கின்ற குருமூர்த்தியே! நாத வடிவானவனே! புதிய அமுதத்தை ஒத்தவனே! எனக்கு எப்போதும் நன்மைகளையே செய்பவனே! ஆடல் வல்லோனே!  அனைத்துலகங்களுக்கும் பேரொளியாக விளங்குபவனே!

நான் இனி இந்தப் புவியில் பிறக்காமலும்; வஞ்சகர்களோடு கூடித் திரியாமலும்; முத்தமிழை மீண்டும் மீண்டும் படித்துத் தளராமலும் முக்தி நிலையை அடியேனுக்கு அருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.