முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 904

நொந்து போகாமல் ஆண்டருள..

Updated On : 14 செப்டம்பர், 2018 at 11:30 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:15 PM

‘நொந்து போகாமல் ஆண்டருள வேண்டும்’ என்று நாயகி பாவத்தில் கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனன தனதன தனன

Advertisement

            தனதன தனன                                             தந்ததான

இடமடு சுறவை முடுகிய மகர

                  மெறிகட லிடையெழு                         திங்களாலே

            இருவினை மகளிர் மருவிய தெருவி

                  லெரியென வருசிறு                             தென்றலாலே

தடநடு வுடைய கடிபடு கொடிய

                  சரம்விடு தறுகண                                 நங்கனாலே

            சரிவளை கழல மயல்கொளு மரிவை

                  தனிமல ரணையின                             லங்கலாமோ

வடகுல சயில நெடுவுட லசுரர்

                  மணிமுடி சிதறஎ                                  றிந்தவேலா

            மறமக ளமுத புளகித களப

                  வளரிள முலையைம                          ணந்தமார்பா

அடலணி விகட மரகத மயிலி

                  லழகுட னருணையி                            னின்றகோவே

            அருமறை விததி முறைமுறை பகரு

                  மரியர பிரமர்கள்                                   தம்பிரானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.