FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பகுதி - 904

நொந்து போகாமல் ஆண்டருள..

6 ஆகஸ்ட் 2025, 5:57 pm IST
பகிர்:

‘நொந்து போகாமல் ஆண்டருள வேண்டும்’ என்று நாயகி பாவத்தில் கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனன தனதன தனன

Advertisement

Advertisement

            தனதன தனன                                             தந்ததான

இடமடு சுறவை முடுகிய மகர

                  மெறிகட லிடையெழு                         திங்களாலே

            இருவினை மகளிர் மருவிய தெருவி

                  லெரியென வருசிறு                             தென்றலாலே

தடநடு வுடைய கடிபடு கொடிய

                  சரம்விடு தறுகண                                 நங்கனாலே

            சரிவளை கழல மயல்கொளு மரிவை

                  தனிமல ரணையின                             லங்கலாமோ

வடகுல சயில நெடுவுட லசுரர்

                  மணிமுடி சிதறஎ                                  றிந்தவேலா

            மறமக ளமுத புளகித களப

                  வளரிள முலையைம                          ணந்தமார்பா

அடலணி விகட மரகத மயிலி

                  லழகுட னருணையி                            னின்றகோவே

            அருமறை விததி முறைமுறை பகரு

                  மரியர பிரமர்கள்                                   தம்பிரானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments