முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 906

எப்போதும் திருத்தணிகையில் வாசம்..

Updated On : 16 செப்டம்பர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:16 PM

‘எப்போதும் திருத்தணிகையில் வாசம் செய்யும் பேறு கிடைக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் ஒரு மெல்லொற்றும்  என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்

Advertisement

            தனத்தன தனத்தந்                                      தனதான

கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்

                  கரிக்குவ டிணைக்குந்                           தனபாரக்

            கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்

                  கலைத்துகில் மினுக்யும்                    பணிவாரைத்

தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்

                  தவிர்த்துன துசித்தங்                           களிகூரத்

             தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்

                  தலத்தனி லிருக்கும்                            படிபாராய்

புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்

                  பொடிப்பணி யெனப்பன்                       குருநாதா

            புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்

                  புகழ்ச்சிய முதத்திண்                           புலவோனே

திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்

                  தெறிப்புற விடுக்குங்                            கதிர்வேலா

            சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்

                   திருத்தணி யிருக்கும்                         பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.