முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 908

யமனை விலக்கியருள வேண்டும்..

Updated On : 19 செப்டம்பர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:17 PM

‘யமனை விலக்கியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் விராலி மலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் நான்கு குறிலுமாய் ஐந்தெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனாதனன தான தந்த தனாதனன தான தந்த

Advertisement

            தனாதனன தான தந்த                               தனதான

கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து

                  குலாவியவ மேதி ரிந்து                      புவிமீதே

      எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து

                  எலாவறுமை தீர அன்று                      னருள்பேணேன்

சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி

                  சுகாதரம தாயொ ழுங்கி                      லொழுகாமல்

      கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து

                  கிலாதவுட லாவி நொந்து                   மடியாமுன்

தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்

                  சொலேழுலக மீனு மம்பை                யருள்பாலா

      நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப

                  நபோமணி சமான துங்க                     வடிவேலா

படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து

                  பசேலெனவு மேத ழைந்து                  தினமேதான்

      விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு

                  விராலிமலை மீது கந்த                       பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.