இந்த நாளில் அன்று(28.4.1953)பலாத்கார, காமவெறியூட்டும் படங்களுக்குக் கண்டனம் - ஹாலிவுட் படங்களைக் காப்பியடிப்பதால் நம் நல்ல பண்பாடுகள் கெடுவதாக ராஜாங்க சபை பெண் அங்கத்தினர்கள் புகார்
சினிமா சட்டத் திருத்த மசோதா மீது ராஜாங்க சபையில் விவாதம் நடைபெற்றது. அதில், ஹாலிவுட் படங்களைக் காப்பியடிப்பதால் நம் நல்ல பெண்பாடுகள் கெடுவதாக பெண் அங்கத்தினர்கள் பலர் ஒருமித்த புகார் தெரிவித்தனர். அத்துடன், பலாத்கார, காமவெறியூட்டும் படங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சினிமா சட்டத் திருத்த மசோதா மீது ராஜாங்க சபையில் விவாதம் நடைபெற்றது. அதில், ஹாலிவுட் படங்களைக் காப்பியடிப்பதால் நம் நல்ல பெண்பாடுகள் கெடுவதாக பெண் அங்கத்தினர்கள் பலர் ஒருமித்த புகார் தெரிவித்தனர். அத்துடன், பலாத்கார, காமவெறியூட்டும் படங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் சபையில் அதிக விவாதமின்றிக் கால் மணி நேரத்தில் நிறைவேறிய சினிமா சட்ட (திருத்த) மசோதா மீது இன்று ராஜாங்க சபையில் எதிர்பாராதவிதமாக நீண்ட விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் 7 பெண் அங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டமான படங்களால் கலாசாரப் பண்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். இவ்விதப் படங்களால் குழந்தைகள் கெட்டுப்போவதாகவும் அவர்கள் கூறினர்.
Advertisement
நாட்டில் ஏற்கெனவே பலாத்கார, காமவெறிகளை ஊட்டக்கூடிய படங்கள் வெளிவந்துள்ளன என்று கூறி அநேகமாகப் பேசிய அனைவரும் கண்டித்தனர். மட்டமான ஹாலிவுட் படங்களை இந்தியப் படாதிபதிகள் காப்பியடிப்பதைக் கண்டிப்பதில் கம்யூனிஸ்ட் அங்கத்தினருடன் காங்கிரஸ் அங்கத்தினரும் சேர்ந்துகொண்டனர்.
சினிமா படத் தயாரிப்பில் ரஷிய முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், சர்க்காரே படங்கள் தயாரிக்க வேண்டும் என்றும், நல்ல படங்களைத் தயாரிப்பதற்காக நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றும் ஸ்ரீ.என்.ஜி. ரங்கா கூறினார்.