இந்த நாளில் அன்று (06.07.1978) பெரிய பங்களா வீடுகளில் நூதன முறையில் திருடிய பலே திருடன் பிடிபட்டான்
மதுரையைச் சேர்ந்த பலே திருடனை போலீஸார் கைது செய்தனர். அந்த ஆசாமி, பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க நூதன முறைகளைக் கையாண்டு வந்ததாகவும், திருச்சியில் பல வீடுகளில் புகுந்து தன் கைவரிசையை காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரையைச் சேர்ந்த பலே திருடனை போலீஸார் கைது செய்தனர்.
அந்த ஆசாமி, பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க நூதன முறைகளைக் கையாண்டு வந்ததாகவும், திருச்சியில் பல வீடுகளில் புகுந்து தன் கைவரிசையை காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆசாமி, பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளுக்கு இரு குழந்தைகளைக் கூட்டிச் செல்வாராம். வரும் வழியில் தனது மனைவி இறந்துவிட்டதாகவும், இந்த இரு குழந்தைகளும் தனது குழந்தைகள் என்றும் மனைவியின் உடலை அடக்கம் செய்ய பணம் தேவை என்றும் கூறுவாராம்.
Advertisement
வீட்டுப் பெண்மணி சிறிது பணம் கொடுப்பதற்காக உள்ளே செல்லும் சமயத்தில் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் நகைகளையும் மேலும் அங்கு கையில் அகப்படும் விலை உயர்ந்த பொருள்களையும் களவாடிக்கொண்டு ஓடிவிடுவாராம்.
திருச்சியில் ஒரு வீட்டில் அவ்வாறு திருட முயலும்போது அந்த ஆசாமி பிடிபட்டான். திருச்சியில் மட்டும் ஒன்பது வீடுகளில் அந்த ஆசாமி அவ்வாறு திருடியதாகத் தெரியவந்துள்ளது.