முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(10.07.1982)நூறு கோடி செலவில் சத்துணவுத் திட்டம் - சாத்தியமாகுமா? கருணாநிதி சந்தேகம்

நூறு கோடி ரூபாயில் நிறைவேற்றப்படவிருக்கும் சத்துணவுத் திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது போகப் போகத்தான் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

நூறு கோடி ரூபாயில் நிறைவேற்றப்படவிருக்கும் சத்துணவுத் திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது போகப் போகத்தான் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.

சத்துணவுத் திட்டம் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தாம் படித்ததாகவும், நிதி அமைச்சர் அடுத்த பட்ஜெட்டை சமர்ப்பித்த பின்னர்தான் இந்தத் திட்டம் பற்றிய செலவினங்கள் தமக்குத் தெரிய வரும் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்நாடு மின்சார வாரியம், சிவில் சப்ளைஸ் கார்ப்பொரேஷன், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் உதவித் தொகைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. அப்படியிருக்கையில் சத்துணவு திட்டத்துக்கும் நூறு கோடி செலவிடுவது என்பது சாத்தியமாகுமா என்பது பற்றி எதிர்காலம்தான் பதில் சொல்லும் என்று அவர் கூறினார்.

Advertisement

1985-ம் ஆண்டுக்கு முன்பாகவே தமிழக சட்டமன்றத்துக்கான அடுத்த பொதுத் தேர்தல்கள் வர வேண்டும் என்று தாம் விரும்பவில்லை என்றும், அப்படி வந்தாலும் ஆச்சரியப்படமாட்டேன் என்றும் அவர் கூறினார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல்கள் நடைபெறுவது என்பது ஒரு ஜனநாயகக் கணக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments