இந்த நாளில் அன்று (15.07.1987) இ.காங்கிரஸில் இருந்து அருண் நேரு நீக்கம்; சுக்லா, ஆரீப்பும் வெளியேற்றப்பட்டனர் - ராஜீவ் நடவடிக்கை
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அருண் நேரு, வி.சி.சுக்லா, ஆரீப் முகமதுகான் ஆகிய மூவரும் இந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மூவரையும் கட்சியில் இருந்து நீக்கும் உத்தரவை இந்திரா காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வெளியிட்டார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அருண் நேரு, வி.சி.சுக்லா, ஆரீப் முகமதுகான் ஆகிய மூவரும் இந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மூவரையும் கட்சியில் இருந்து நீக்கும் உத்தரவை இந்திரா காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வெளியிட்டார்.
அருண் நேரு, வி.சி.சுக்லா, ஆரீப் முகமதுகான் ஆகிய மூவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தகவலை இந்திரா காங்கிரஸ் பொதுச் செயலாளர் கருப்பையா மூப்பனார் தெரிவித்தார்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மூவரையும் ராஜீவ் காந்தி, இந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கி இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மூவரும் எவ்வளவு காலத்துக்கு கட்சியில் இருந்து விலக்கப்பட்டனர் என்ற தகவலை மூப்பனார் தெரிவிக்கவில்லை.
Advertisement
சமீபகாலத்தில் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வி.பி.சிங் பேசிய பேச்சுக்களினாலும், அவரது நடவடிக்கைகளினாலும் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும், வி.பி.சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அருண் நேரு, வி.சி.சுக்லா, ஆரீப் முகமதுகான் ஆகிய மூவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இந்தியர்கள் சட்டவிரோதமாக பணம் சேர்த்து வைத்திருத்தல், பாதுகாப்பு தளவாட பேரங்கள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பாக அருண் நேரு, வி.சி.சுக்லா, ஆரீப் முகமதுகான் ஆகியோர் வி.பி.சிங்கை பொதுப்படையாக ஆதரித்து வந்தனர். மீரட் கலவரம் தொடர்பாக அரசை, ஆரீப் முகமதுகான் கடுமையாக விமரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.