முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(17.07.1989)முட்டுக்கட்டை நிலைக்கு இலங்கையே காரணம்; அமைதிப் படையை வாபஸ் பெற முயன்றபோது பிரேமதாசதான் தடுத்தார் - ராஜீவ்

இலங்கையில்இருந்து அமைதிப் படையை வாபஸ் பெற முன்று இந்தியா விரும்பியபோது, ஜனாதிபதி பிரேமதாசதான் அதைத் தடுத்ததாக பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

இலங்கையில்இருந்து அமைதிப் படையை வாபஸ் பெற முன்று இந்தியா விரும்பியபோது, ஜனாதிபதி பிரேமதாசதான் அதைத் தடுத்ததாக பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.

இந்திய அமைதிப் படையை வாபஸ் பெறுவதில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு இலங்கையே காரணம் என அவர் குற்றம் சாட்டினார். இந்திய - இலங்கை ஒப்பந்தப்படியான பொறுப்புகளில் இருந்து இலங்கை பின்வாங்கிவிட முடியாது என்றார் அவர்.

இந்திய அமைதிப் படையால்தான், இலங்கை இன்னும் ஒன்றுபட்ட நாடாக இருக்கிறது என்று அவர் கூறினார், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்திய அமைதிப் படையை வாபஸ் பெற இந்தியா விரும்பியது. ஆனால் இலங்கைதான் அதை விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டில், இப் பிரச்னை குறித்து அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜயவர்த்தனாவுடன் தாம் பேசியதாகவும், தனக்கு அடுத்தபடியாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் பிரேமதாசவுடன் இது பற்றி விவாதிக்கும்படி அவர் கூறியதாகவும் ராஜீவ் காந்தி சொன்னார்.

ஆனால், எக்காரணம் கொண்டும் இந்தியப் படையை விலக்கிக்கொள்ளக்கூடாது என்று அப்போது பிரேமதாச கூறியதாகவும், இந்திய அமைதிப் படையை வாபஸ் பெறுவதற்கான கால அட்டவணை குறித்து விவாதம் நடத்துவது பற்றி பிரேமதாசவுக்கு தாம் எழுதிய கடிதங்களில் வற்புறுத்தி வந்ததாகவும், ஆனால் அவர் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டதாகவும் ராஜீவ் காந்தி சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments