இந்த நாளில் அன்று(20.07.1992)காஷ்மீரை இந்தியா கைவிட வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை
காஷ்மீரை இந்தியா கைவிட்டுவிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரினார்.
காஷ்மீரை இந்தியா கைவிட்டுவிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரினார்.
காஷ்மீரில் இந்திய அத்துமீறல்கள் பற்றி உலகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பப் போவதாகவும் அவர் உறுதி கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்தில் நடந்த பேரணியில் அவர் பேசினார்.
Advertisement
காஷ்மீருக்காக மூன்றாவது யுத்தம் எதையும் நடத்தப்போவதில்லை. ஆனால், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானின் அரசியல், தார்மீக ஆதரவு தொடரும் என்றார் அவர்.