முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(22.07.1994)காவிரியில் மற்றொரு அணை: தமிழகத்துக்கு கர்நாடகம் வேண்டுகோள்

காவிரி நதியில் மேட்டூர் அணைக்குக் கீழே மற்றொரு அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

காவிரி நதியில் மேட்டூர் அணைக்குக் கீழே மற்றொரு அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது.

காவிரி நதியின் உபரி நீரை தேக்கிவைக்க கர்நாடகத்தால் தற்போது இயலவில்லை. இந்த உபரி நீரை வீணாகக் கடலில் கலக்கவிடாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமானால் அதனால் தமிழக மக்களுக்குப் பயன் ஏற்படும்.

Advertisement

காவிரி நதியில் மேட்டூர் அணைக்குக் கீழே மற்றொரு அணையைக் கட்டி இந்த நீரை தமிழகம் தேக்கலாம். எனவே இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments