இந்த நாளில் அன்று(18.03.1970)ரூ.300 வரை வருமானம் உள்ளவருக்கும் படி அரிசி - ஏப்ரல் முதல் சென்னை, கோவை நகரங்களில் அமல்
ரூபாய்க்கு படி அரிசி திட்ட சலுகை இதுவரை மாதம் ரூ.200-க்கு உட்பட்ட மக்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. இந்த வருமான வரம்பு இப்பொழுது உயர்த்தப்பட்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மாத வருமானம் ரூ.300 வரை உள்ளவர்களுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படும். இது சென்னை, கோவை பகுதிகளுக்கு மட்டுமே உண்டு.
இந்த நாளில் அன்று
(18.03.1970)
ரூ.300 வரை வருமானம் உள்ளவருக்கும் படி அரிசி - ஏப்ரல் முதல் சென்னை, கோவை நகரங்களில் அமல்
Advertisement
ரூபாய்க்கு படி அரிசி திட்ட சலுகை இதுவரை மாதம் ரூ.200-க்கு உட்பட்ட மக்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. இந்த வருமான வரம்பு இப்பொழுது உயர்த்தப்பட்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மாத வருமானம் ரூ.300 வரை உள்ளவர்களுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படும். இது சென்னை, கோவை பகுதிகளுக்கு மட்டுமே உண்டு.
இந்த புது சலுகையை உணவு அமைச்சர் ஸ்ரீ ப.உ.சண்முகம் புதன்கிழமையன்று சட்டசபையில் உணவு, கால்நடை மான்யக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கையில் அறிவித்தார்.
வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டுமென்று சட்டசபையில் அங்கத்தினர்கள் கோரியதை முதலமைச்சருடன் அவர் கலந்து விவாதித்ததாகவும், முதலமைச்சர் மேற்கண்டவாறு சலுகை அளிக்க ஏற்றுக்கொண்டார் என்றும் அவர் அறிவித்தார்.
ஸ்ரீ ஏ.வி.பி.ஆசைத்தம்பி (திமுக) உடனடியாக எழுப்பிய ஒரு விளக்கத்துக்கு உணவு அமைச்சர் பதிலளிக்கையில், சர்க்கரை ரேஷன் கார்டில் காட்டப்பட்டிருக்கிற வருமான கணக்கு ஒன்றைத்தான் அரசு சான்றாக எடுத்துக்கொள்ளுமே தவிர, புதிதாக வருமான சான்றிதழ்களை பெற்று பரிசீலிப்பதோ, அல்லது திடீரென்று வேலை இழந்து அதனால் வருமானம் குறைந்துள்ள கணக்குகள், குடும்பம் பிறகு பிரிந்ததால் வருமானம் குறைந்து இருக்கும் கணக்கு ஆகியவைகள் எதையும் அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும், இது விஷயத்தில் புதிதாக எந்த 'விவகாரத்தையும்' உணவு இலாகா வைத்துக்கொள்ளாது என்றும் இதற்கு சகல கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.