முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(27.03.1979)சென்னைக்கு மீண்டும் நடமாடும் கோர்ட்டுகள்?

போக்குவரத்து விதிகளை மீறியது சம்பந்தமான குற்றங்களை விசாரிக்க மீண்டும் நடமாடும் நீதிமன்றங்களை ஏற்படுத்துவது குறித்தும், இக்குற்றங்களை விசாரிப்பதற்கென்றே தனி மாநகர மாஜிஸ்டிரேட் கோர்ட்டுகளை ஏற்படுத்துவது குறித்தும் மாநில அரசாங்கம் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

போக்குவரத்து விதிகளை மீறியது சம்பந்தமான குற்றங்களை விசாரிக்க மீண்டும் நடமாடும் நீதிமன்றங்களை ஏற்படுத்துவது குறித்தும், இக்குற்றங்களை விசாரிப்பதற்கென்றே தனி மாநகர மாஜிஸ்டிரேட் கோர்ட்டுகளை ஏற்படுத்துவது குறித்தும் மாநில அரசாங்கம் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது.

1977 இறுதி வரை சென்னை நகரில் மூன்று நடமாடும் கோர்ட்டுகள் இயங்கி வந்தன. விதிமுறைகளைத் தாங்கள் மீறும்போது, இந்த நடமாடும் கோர்ட்டுகளின் விசாரணைக்குத் தாங்கள் உள்பட நேருவதாகவும் அப்போது அலுவலகங்களுக்குப் போவது காலதாமதமாவதாகவும் அலுவலகம் செல்பவங்கள் புகார் கொடுத்ததன் பேரில் அவை ரத்து செய்யப்பட்டன.

என்றாலும், இந்த நடமாடும் நீதிமன்றங்கள் இல்லாததால் போக்குவரத்து விதிகளை அமல் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சாலைகளைப் பயன்படுத்துபவர்கள் விதிகளை அவ்வளவு கவனமாக கடைப்பிடிப்பதில்லை. சாதாரண நீதிமன்றங்களுக்கு போக்குவரத்து சம்பந்தமான வழக்குகள் சென்றால், விசாரணை நீடித்துக்கொண்டே போகிறது. ஆகையால், அப்படி வழக்குகளை பதிவு செய்ய போக்குவரத்து கான்ஸ்டபிள்களும் ஆர்வமாய் இருப்பதில்லை.

Advertisement

போக்குவரத்து வழக்குகளை விசாரிப்பதற்கென்றே மூன்று மாநகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றங்களை அமைக்குமாறு போக்குவரத்து போலீஸார் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். போக்குவரத்து சம்பந்தமான ஏராளமான வழக்குகளின் விசாரணை முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments