உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தி டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில், தஞ்சம் கேட்டோ, அகதியாகவோ, இன்னொரு நாட்டுக்கு விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ இடம் பெயர்ந்தோரே இடம்பெயர்வோர் ஆவார்கள். அத்துடன் உள்நாட்டிலேயே இடம்பெயர்வோரும் உள்ளனர்.
இடம் பெயர்ந்தோருக்கு ஒவ்வொரு அரசும் பாதுகாப்பு, சலுகைகள் வழங்க வேண்டும். இடம்பெயர்வோரை தவிர்க்கும் போது, அந்நாட்டிற்கு தான் இழப்பு. இவர்களை அங்கீகரிக்கும் போது நாட்டின் பொருளாதாரம் உயரும்.
சமூக, பொருளாதார, கலாசாரத்தில் அவர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். உலகளவில் 21 கோடி பேர் இடம்பெயர்ந்தோராக உள்ளனர். இதில் 49 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் உலக மக்கள்தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.