இந்த நாளில்...

21.12.1968: முதன்முறையாக மனிதர்களை சுமந்து சென்ற அப்போலோ-8 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நாள் இன்று!

சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக மனிதர்களை அனுப்பும் ‘அப்போலா விண்வெளி திட்டத்தை’ ஆரம்பித்த அமெரிக்கா , தொடர்ந்து விண்கலங்களை அனுப்பியது.

DIN

சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக மனிதர்களை அனுப்பும் ‘அப்போலா விண்வெளி திட்டத்தை’ ஆரம்பித்த அமெரிக்கா , தொடர்ந்து விண்கலங்களை அனுப்பியது. மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி பாதுகாப்பாக கொண்டு வருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சியின் வரிசையில், 2-வது திட்டமான அப்போலோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து 1968-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.

இந்த விண்கலம் தான் மனிதர்களை சுமந்து கொண்டு சென்று முதல் முறையாக பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து, பூமியின் நிலவு வட்டப்பாதையை அடைந்த விண்கலம் ஆகும்.

வெற்றிகரமான பயணத்திற்குப் பிறகு அப்பல்லோ விண்கலம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

இந்த விண்கலத்தில் பிராங் போல்மேன், ஜேம்ஸ் லோவல், வில்லியம் ஆண்டர்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் பயணித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT