உலகிலேயே முதன்முறையாக கிரேக்கர்கள்தான் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில் இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன.
கி.மு.700ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் இந்த காலண்டர் முறையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின் கடைசி இருமாதங்களாக (11,12வது மாதங்கள்) இருந்தன.
கி.மு.46ல் ரோமானிய பேரரசர் ஜுலியஸ் சீசர் இந்த காலண்டர் முறையில் மேலும் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இருமாதங்களாக ஆக்கினார். இது ஜுலியன் காலண்டர் என்றழைக்கப்பட்டது. இதில்தான் சாதா ஆண்டு மற்றும் லீப் ஆண்டு என்ற முறைகளை கொண்டு வந்தார்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.