அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இருந்து 65 மைல் தொலைவில் உள்ள நெவாடா சோதனை பகுதியில், 19.09.1957 அன்று உலகின் முதல் நிலத்தடி அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நடத்தியது.
இந்த சோதனையில் 1.7 கிலோ டன் எடையுள்ள அணு ஆயுதம் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.ரெய்னர் என்று அழைக்கப்பட்ட இந்த சோதனை உலகிலேயே முதல்முறையாக முழுக்க நிலத்தடியில் செய்யப்பட்ட, கதிரியக்க விளைவுகள் எதுவும் இல்லாத சோதனையாகும்.
இந்த சோதனையானது நெவாடா சோதனை பகுதியில், 1957 மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நடைபெற்ற 29 சோதனைகளில் ஒரு பகுதியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.