கவிதைமணி

எல்லைக் கோடு - ஆர்.தியாகு

கவிதைமணி

நாடு உயிர்வாழ‌
எல்லைக் கோட்டில்
சுவாசிக்கிறான்!
இரும்புவேலி நடுங்கும் பனியில்..
எல்லைக் கோட்டில் நிற்பவனுக்கு
தெரியுமா?
வறுமையை குடித்து விவசாயி சாவு!
ஐந்து நிமிடத்துக்கு ஒரு கற்பழிப்பு!
காந்திநோட்டும் அதிகாரிகளும் காதலர்கள்!
வருகை ஏட்டில் போட்டாலும்
கையெழுத்துக்கு தலைசொறியும் அரசியல்வாதிகள்!
உள்நாட்டில்தான் வியபாரம் ஆனால்..
சுவீஸ் வங்கியில் கள்ளாபெட்டி!
காசுக்குதான் நல்ல கல்வி!
லஞ்சமும் காமமும் மட்டுமே
நாட்டில் சாதி பார்க்காது!
எல்லைக் கோட்டிற்கு இருபக்கமும்
ரத்த கவுச்சியில் பிணங்கள்
யாருக்காக‌..?
வெறும் மாத சம்பளத்திற்காகவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT