கவிதைமணி

எல்லைக்கோடு : கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

நாட்டின் எல்லை முற்றம் 
நம் மண்ணின் பரப்புக்குள்ளே !
தேசக்கதவுகள் நிலைகொள்ள 
தேசத்தின் எல்லைக்குள் பாதுகாப்பு !
எல்லைக்கொடி பறக்கும் 
எங்கள் வீரர்களின் வீரத்திலே
எதிலும் வெற்றி காணும் பாரதம் 
எல்லைக்கோடு என்ன ஒரு சவாலா ?
அண்டை நாடுகளின் ராணுவம் 
அந்நியர்களின் ஊடுருவல்கள் 
மண்ணாசையை வெல்வோம் 
மண்ணின் மைந்தர்களே வாரீர் !
வீரமுழக்கம் - சுபாஷ் சந்திரபோஸின் வீரம் 
வீரர்களே வாரீர் ! எல்லைச்சாமிகள் நீங்கள் !
அந்நியர்களின் படையெடுப்பை தடுப்போம் 
ஆங்கிலேயத்தைப் போல வெல்வோம்
சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வேளையில்
சுதேசிகளே வாரீர் ! நம்ப டைகள் சேர்ப்போம் !
பகைவர்களுக்கு பயம் தருவோம் 
பதிலடி தருவோம் எல்லையைத்  தாண்டினால் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT