எதிர்கால கனவு: ஆர்.அருண்குமார்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM
வாழ்க்கையின் கதவுகள் கனவுகளே
கவலைகள் நீக்கிடும் விரைவினில்.
பாழ்பட்ட நினைவை சீரமைத்து
பாதைகள் போட்டிடும் நேராக்கி.
காற்றில்லா புவியில் உயிரேது
கரையில்லா ஆற்றில் நீரேது.
மாற்றமில்லா வாழ்வில் சுவையில்லை
மாசுற்ற உலகில் உயிரில்லை.
இலட்சியப் பாதையில்லாவிட்டால்
இரட்சிக்க யாரும் கிடையாது.
அலட்சியமாக நினைக்காமல்
அன்பான வாழ்வை தேர்ந்திடுங்கள்.
எதிர்காலம் என்ற இலக்கினில்
எத்தனை கனவுகள் உள்ளன.
புதிராகும் வாழ்வில் என்றும்
புதுமையாக இருத்தல் அவசியம்.