கவிதைமணி

சுனாமி சுவடுகள்:  கோ. மன்றவாணன்

கவிதைமணி

அழகு முகத்தில்
ஆறாத வெட்டுக்காயமாக
இரத்தமும் சீழுமாக வதைக்கிறது
சுனாமி
இன்னமும்
கடலோரத்தில் அமர்ந்து
காற்று வாங்கும்போதும்
சுடுகிறது
சுனாமி அனல்

கடலைத் தாண்டி ஊருக்குள் வந்த
சுனாமியின்
சுவடுகள் இங்கே…
பூகோளச் சின்னங்களாகவும்
சரித்திரப் பாடங்களாகவும்

காப்பாற்றுத் தாயே என
எங்கள்
கடலோரக் குப்பத்துக் கோவில்களில்
சுனாமி அம்மன் சிலைகள்

தனிப்பாடை
தனி ஊர்வலம்
தனிக்குழி என்றில்லாமல்
ஒரே குழியில்
உறவுகளைப் புதைத்தோம்
சாதிமதத்தையும் சேர்த்துத்தான்

பெற்றோரை இழந்த பிள்ளைகள்
பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்
துணையை இழந்த உயிர்கள்
தோழமையை இழந்த மனங்கள்
எனச்
சுனாமியின் சுவடுகள்
மீனவத் தெருக்களில் காய்கின்றன
ஆண்டுபல கடந்தும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

SCROLL FOR NEXT